Breaking News

கோவையைச் சேர்ந்த முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மத நல்லிணக்கத்திற்காக பாடுபடுவோருக்கான “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” கோவையைச் சேர்ந்த முகமது ரஃபிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு 

 

கோவையைச் சேர்ந்த முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை குடியரசு தினத்தன்று சென்னையில் தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்பட இருக்கிறது

தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சிறப்பாக சேவை செய்து வரும் நபருக்கு, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், மத நல்லிணக்கத்துக்காக பணியாற்றிய, கோவையை சேர்ந்த முகமது ரபி என்பவருக்கு, 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை, பொதுத்துறை செயலர் ஜகந்நாதன் வெளியிட்டுள்ளார். 

முகமது ரபிக்கு வழங்கப்படும் பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். இது தவிர, 25 ஆயிரம் ரூபாய்க்கான வரைவு கேட்புக் காசோலை, சான்றிதழ் போன்றவை முதல்வரால் வழங்கப்பட உள்ளன.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback