நீர்நிலை இடங்களை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க நீர்நிலை தொடர்பான இடங்களை பத்திரப்பதிவு செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பத்திரப்பதிவு செய்வதற்கு முன், ஆக்கிரமிப்பு இடமில்லை என சான்று பெறுவது கட்டாயம் எனவும் கூறியுள்ளது. ஆக்கிரமிப்பு இல்லை என்ற சான்றை பெறாமல் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும்.
அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்