Breaking News

திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற வேண்டும் : கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கோவையில் கொரோனா பரவல் எதிரொலியாக மாநகரில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 


தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ வகையிலும்‌, பரவி வரும்‌ உருமாறிய கொரோனா ஓமைக்கரான்‌ வைரஸ்‌ நோயை கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ நலன்‌ கருதியும்‌ தமிழ்நாடு அரசு மாநிலம்‌ முழுவதும்‌ 6ம் தேதி முதல் முதல்‌ வார நாட்களில்‌ இரவு 10 மணி முதல்‌ காலை 5 மணி வரையிலும்‌ இரவு நேர ஊரடங்கும்‌, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ முழு ஊரடங்கும்‌ நடைமுறைப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகள்‌ விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரசின்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடும்‌ வகையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள உணவகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌, விருந்து அரங்கங்கள்‌, சமூக நலக்கூடங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற மாநகராட்சியின்‌ கோவிட்‌ இணையதளத்தில்‌ தெரியப்படுத்திட வேண்டும்‌, என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback