நகர்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தற்போது கொரானா பரவல் உச்சத்தில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கொரானா அச்சுறுத்தலால் தற்போதையை சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும். தேர்தலை நடத்தினால் கொரானா பாதிப்பு மிக மோசமான நிலைக்கு வரும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது
மேலும் இந்த வழக்கு நாளை மறுநாள் (ஜன.21) விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்