Breaking News

இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

அட்மின் மீடியா
0
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
 

இது தொடர்பான அரசாணையில், 

பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான 

நன்னடத்தைச் சான்று, 

ஆளறிசான்று, 

தமிழ் வழியில் படித்ததற்கான சான்று

இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், 

மதிப்பெண் பட்டியல் நகல், 

புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate), 

கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate), 

உள்ளிட்ட அனைத்து 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback