Breaking News

நாளை முழு ஊரடங்கு - ஆம்னி பஸ்கள் இயங்காது என அறிவிப்பு.....

அட்மின் மீடியா
0

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஜனவரி 31 வரை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

 

கடந்த 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும்,மேலும் கடந்த 9ம் தேதி மற்றும் 16 ம்தேதி முழு ஊரடங்கும் அதனை தொடர்ந்து இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில், அரசு பஸ்கள் இயங்காத நிலையில் நாளை ஒருநாள் ஆம்னி பஸ்களும் இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback