தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை – தமிழக அரசு..!
தமிழகத்தில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ் வழியில் படிக்கும் +2 மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது என தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவு பிறப்பித்துள்ளளார்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20-க்குள் ஆன்லைனில் செலுத்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.மேலும், கண்பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் , வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்