Breaking News

தமிழ்நாட்டில் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



ஜனவரி 18-ம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17-ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜன.14) முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. 


பொங்கல் பண்டிகை - 14.01.2022- வெள்ளிக் கிழமை
திருவள்ளுவர் தினம் - 15.01.2022- சனிக்கிழமை
உழவர் திருநாள் - 16.01.2022- ஞாயிற்றுக் கிழமை
திங்கட்கிழமை 17.01.2022 விடுமுறை...
தைப்பூசம் - 18.01.2022- செவ்வாய்க் கிழமை

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback