ஜனவரி 31 வரை 1 முதல் 9 வகுப்பு பள்ளிகள் விடுமுறை
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு
கொரானா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 14 ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை,
அதேபோல் வருகிற 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்