Breaking News

உ.பியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 முதல்வர்கள், 3 துணை முதல்வர்கள் ஒவைசி அறிவிப்பு வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகியவை களத்தில் தீவிரமாக உள்ளன.இதேபோல், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் தேர்தல் போட்டியில் ஈடுபட்டுள்ளது.

அசாதுதின் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் தேர்தலில் ஜன் அதிகார் மற்றும் பாரத் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

மேலும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், 2 முதல்வர்கள் இருப்பார்கள் எனவும், அதில் ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும், ஒருவர் பட்டியலினத்தவராகவும் இருப்பார்கள் எனவும் ஒவைசி அறிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமியர் உட்பட மூன்று பேர் துணை முதல்வர்களாக இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


https://twitter.com/imshaukatali/status/1484849909279133697

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback