Breaking News

சுந்தர் பிச்சை,பிபின் ராவத்,உள்ளிட்ட 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு முழு விவரம்....

அட்மின் மீடியா
0

குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை 128 பேருக்கு அறிவித்துள்ளது.





இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில்

4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், 

பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், 

பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது

பத்ம விபூஷண் விருது 

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,

உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்,

பிரபா அட்ரே,

ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) 

ஆகிய நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருது தை மத்திய அரசு அறிவித்துள்ளது.


பத்ம பூஷன் விருது

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,

மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா, 

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை,

சீரம் நிறுவன மேலாண் இயக்குநர் சைரஸ் பூனாவாலா, 

பாரத் பயோடெக்கின் கிருஷ்ணா எல்லா - சுசித்ரா எல்லா, 

கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா, 

இணை நிறுவனர் மனைவி சுசித்ரா எல்லா மற்றும், விக்டர் பானர்ஜி,

குர்மீத் பவா, 

புத்ததேவ் பட்டாச்சார்யா, 

நடராஜன் சந்திரசேகரன், 

மதுரா ஜெஃப்ரி, 

ரஷீத் கான், 

ராஜிவ் மெஹ்ரைஷி, 

உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பட்டியல் 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback