புதிய மின் மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்! பெற விண்ணப்பிப்பது எப்படி....
நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் வாங்க விண்ணப்பிக்கலாம்
சிறு விவசாயிகள் தங்களிடம் உள்ள திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றவும், புதிய மின்மோட்டார் வாங்கவும் மானியம் வழங்கப்படும்.
3 ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு,குறுவிவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
வேளாண்மைபொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து, தங்களுக்கான நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 அல்லது அதற்கு ஆகும் மொத்த தொகையில் 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ அத்தொகை விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்,
தேவையான ஆவணங்கள்:-
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
சிட்டா,
அடங்கல்,
ஆதார் அட்டை நகல்,
நில வரைபடம்,
சிறு,குறு விவசாயி (வட்டாட்சியர் சான்று),
மின்சார இணைப்பு அட்டை
தற்போதுள்ள பம்புசெட் விவரம்
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் உங்கல் அருகில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே/பொ) வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில்விண்ணப்பிக்கலாம்