Breaking News

1முதல் 12ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளையும் பிப்ரவரி 1 முதல் திறக்க முடிவு. - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

அட்மின் மீடியா
0

கொரானா பரவலை கட்டுப்படுத்த  தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 


இந்நிலையில், கொரானா  கட்டுப்பாடுகளில் தளர்வுகள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் தரும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் பள்ளிகளை சுத்தப்படுத்தி கரோனா விதிமுறைகளுடன் முழு அளவிலான மாணவர்களுடன் செயல்படத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback