Breaking News

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அட்மின் மீடியா
0

தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது அதன்படி



ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் - வாக்களர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது. ஆனாலும் ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியை மையமாக வைத்து18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் படிட்யலில் சேர்க்க முடியும். இனி ஆண்டுக்கு 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்பு வழங்கப்படும். 

மேலும் தேர்தல் வாக்குப்பதிவுகள் பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால், இனி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எந்தக் கட்டிடத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம். திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் என எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. 

இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட உள்ளது.

 

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback