ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..
அட்மின் மீடியா
0
ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தமிழக
பள்ளிகளில் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்தரவுகள்
பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்
1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்
நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்
பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்
அதிக வெப்பநிலை இருப்போரை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது
ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்
மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்
வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
நீச்சல் குளங்களை மூட வேண்டும்
இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Tags: தமிழக செய்திகள்