Breaking News

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.




இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்,அவர்கள்

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் ஒமிக்ரான் பரவல் குறித்து அச்சம் அடையத் தேவையில்லை. அதேவேளையில் விழிப்புடன் இருப்பது அவசியம். ஒமிக்ரான் தொற்று டெல்டா வகை கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. தற்போதைய சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை மீற வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback