நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு
.
இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டாலும், குளிர்கால கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக 3 சட்டங்களும் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்