பென்சிலை திருடிட்டான் சார்...போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த சிறுவன்! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ஆந்திராவில் 1ம் வகுப்பு மாணவன், சக மாணவன் பென்சிலை திருடிவிட்டதாக கூறி போலீசாரிடம் புகாரளித்து அவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முறையிட்ட சிறுவன் வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த ஹனுமந்த். அதே ஊரில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சில மாணவர்களுடன் வந்த ஹனுமந்த், அதில் ஒரு மாணவன் மீது பென்சிலை திருடி விட்டான் எனவும் என்னுடைய பென்சிலை திருடியவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசாரிடம் கூறினான்.
இது பற்றி விசாரனை செய்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகின்றது
வைரல் வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ