ரெட் அலர்ட் நாளை இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை
அட்மின் மீடியா
0
தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளா தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக
நாளை 18 ம் தேதி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு
சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு
இடங்களில் அதி கன மழையும்,
செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர்,
விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும்,
சேலம், தர்மபுரி,
கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு
இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும்
காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும்
பெய்யக்கூடும்.
19 ம் தேதி
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய
கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி,
கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன
மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்
பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்