சென்னையில் மேலும் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்!
சென்னையில் மேலும் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேலும் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை தொடரும். கடலோர மாவட்டங்களில் மிக கனமழை தொடரும். எனத் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்