BIG BREAKING மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவிப்பு
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
இன்று நவ.19 காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். சரியாக காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்பவும் வேண்டுகோள்!
விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
விவசாயிகள் எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்கள் என்னென்ன?
1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்
3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.இவை தான் விவசாயிகள் எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களாகும்
Tags: இந்திய செய்திகள்