புதிய தொழில் தொடங்க 75 இலட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன்! விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன்! இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
தமிழ்நாட்டில்
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும் முதல் தலைமுறை தொழில்
முனைவோர் நிறுவனங்களைத் தொடங்க "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்
நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம். பட்டயம் தொழிற்கல்வி தேர்ச்சி
பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி
செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு:-
பொது
பிரிவினருக்கு 21க்கு மேல் 35க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு
பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர். பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர்.
மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.
இத்திட்டத்திற்கு
ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு
குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
கடன் தொகை:-
அனைத்து
உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இத்திட்டத்தின் கீழ்
ரூ.10.00 இலட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று 25% அதிகபட்ச
மானியம் ரூ.50 இலட்சம் தற்போது வரை வழங்கப்பட்டு வந்தது.
புதிய
தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS)
கீழ் பயன் பெற தேவையான கல்வி தகுதியை பனிரெண்டாம் வகுப்பு என தளர்த்தியும்
தனி நபர் முதலீட்டு மானியத்தை ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.75இலட்சமாக
உயர்த்தி 1.10.2021 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்
இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம் / பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி
தொழில் முனைவோருக்கு 10% கூடுதல் முதலீட்டு மானியம் அதிகபட்சம் ரூ.10
இலட்சம் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன தொழில் செய்யலாம்
இத்திட்டத்தில்
அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, CNC
லேத் இயந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பேப்பர் போர்ட், JCP, போர்வெல்
வாகனம், பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலைமிட்டாய் தயாரித்தல்.
கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி
கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண்/பெண்),
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பிரோ மற்றும் சேவை சார்ந்த
தொழில்களும் துவங்கலாம். Onlineல் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு
பரிந்துரைக்கப்படும்.
திட்ட மதிப்பீட்டில் பொதுப்
பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக
முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனைத் திருப்பி செலுத்தும் தொழில்
முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமும்
வழங்கப்படும். தற்போது COVID-19 காரணமாக தொழில்முனைவோர் பயிற்சியிலிருந்து
மார்ச் 2022 வரை அரசால் விலக்களிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்
கீழ் பயன் பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள
முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது
தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்,
விருதுநகர் (04562 - 252739, 252308) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி..இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்கள்.