மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணத்தொகை – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு 25,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும்.
மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ 5000 வழங்கப்ப்டும்
மீனவர்கள் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்