வாக்காளர்கள் கவனத்திற்கு பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய நவ.20, 21 ம்தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறும்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் இருந்தால் அதனை மாற்றும் விதமாக சிறப்பு முகாம்கள் வரும் 20 மற்றும் 21 ம்தேதி அன்று நடைபெறும் என அறிவிப்பு
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 01.01.2022 தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 01.11.2021 முதல் 05.01.2022 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
மேலும், வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக 13.11.2021, 14.11.2021, 27.11.2021 அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது.
எனினும், கனமழை காரணமாக சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் தொடர்பான நடிவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரைச் சேர்ப்பதற்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக 20.11.2021 மற்றும் 21.11.2021 ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்