கனமழை இன்று 15.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று 15:11:2021 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று 15.11.2021 அன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது
சென்னை, மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அதன்படி புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் மழை நீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் நாளை (15.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்