Breaking News

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

அட்மின் மீடியா
0

தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளா தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக 

இன்று 

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி ,திண்டுக்கல் ,திருப்பூர் ,சேலம் ,தர்மபுரி, நாமக்கல் ,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை 17 மற்றும் 18ம் தேதி

திருவள்ளூர் ,சென்னை,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை ,வேலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

19ஆம் தேதி 

தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை:-

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback