அடுத்த 5 நாள் மழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு
நாளை 27.10.2021
நீலகிரி ,திருச்சி ,திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
28.10.2021 ம் தேதி
புதுக்கோட்டை ,மதுரை, திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் , மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.10.2021 ம் தேதி
கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
30.10.2021 ம் தேதி
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை
Tags: தமிழக செய்திகள்