Breaking News

நவ.1ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

அட்மின் மீடியா
0

மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும், மழலையர்களுக்கான நர்சரி பள்ளிகளும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் இயங்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் மழலையர்களுக்கான பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நவ.,1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது. தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை. மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback