Breaking News

மாணவச் செல்வங்களே! மனம் தளராதீர்கள்! NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! முதல்வர் விழிப்புணர்வு வீடியோ

அட்மின் மீடியா
0

மாணவச் செல்வங்களே! 

மனம் தளராதீர்கள்!

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்,ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்!

கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்!

NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! எனதன் டிவிட்டரில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில் எல்லோருக்கும் வணக்கம்!கடந்த 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில் தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக்கொண்டேன்.

 

ஆனால், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்து விட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

 

வீடியோவை பார்க்க:

https://twitter.com/mkstalin/status/1438086602190843904

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback