பஸ் கண்ணாடியை உடைத்து யானை அட்டகாசம் பயனிகள் பீதி: வைரல் வீடியோ
மேட்டுப்பாளையம்அருகே சாலையில் காட்டு யானை ஒன்று அரசுபேருந்து கண்ணாடியை உடைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்தது.உடனடியாக ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கினார். காட்டு யானையும் பேருந்தை துரத்தி வந்து தனது தந்தத்தால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் யானையை கண்டு மிரண்டு போயினர். .
வீடியோ பார்க்க:
https://twitter.com/endrumkovaioffl/status/1441710643300556800
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை நொறுக்கிய காட்டு யானை.#Coimbatore #EndrumKovai pic.twitter.com/QDZzZULIsS
— Endrum Kovai (@endrumkovaioffl) September 25, 2021
Tags: வைரல் வீடியோ