குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் நியமனம்
குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் நியமனம்
குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானியின் ராஜினாமாவை அடுத்து இன்று பூபேந்திர படேல் பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விஜய் ரூபானி (65) முதல்வர் பதவியில் இருந்து சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து குஜராத் காந்திநகரில் இன்று நடைபெற்ற மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ பூபேந்திர படேல் பாஜக சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத் முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேலுக்கு நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் பூபேந்திர படேல், கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் கடலோடியா தொகுதியின் முதல்முறையாக போட்டியிட்டு வெற்ரி பெற்றார்.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்து
Tags: இந்திய செய்திகள்