Breaking News

வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் மாநில பொறுப்பாளர் வெட்டி படுகொலை

அட்மின் மீடியா
0

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம் (40). இவர் மனித நேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில பொறுப்பாளராக இருந்தவர். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 


இந்நிலையில் நேற்று மாலை  6.30 மணியளவில் வசீம் அக்ரம்  வீட்டுக்கு  அருகிலுள்ள மசூதியில் தொழுகை முடிந்து தன் 7 வயது மகனுடன் வீட்டிற்கு நடந்துவந்து கொண்டிருந்தபோது  காரில் வந்த 6 பேர் கும்பல் வசீம் அக்ரமை சரமாரி வெட்டி படுகொலை செய்துள்ளார்கள். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அவர் மகனைவிட்டு விட்டு தப்பி அதே காரில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள்

இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback