Breaking News

காவல்துறை ஆணையம், பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை, காவல்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க தனி ஆப், முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
காவல்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கம்..!
 

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அப்போது
 
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும் 
 
பொதுமக்கள் காவல்நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கம். 
 
இணையதள காணொளி மூலம் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்
 
தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.
 
காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும்,காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்.
 
ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்.  

பொதுமக்கள் தங்கள் குறைகளை காணொலியில் காவல் நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்க செயலி உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback