Breaking News

மீண்டும் கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுபாடு

அட்மின் மீடியா
0
மீண்டும் கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுபாடு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் (COVID-19) தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் விதித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கொரோனா நோய் (COVID-19) தொற்றினை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசால் ஊரடங்கு 31.10.2021 வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் 01.09.2021 முதல் விதிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 

தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் 16.09.2021 முதல் கீழ்க்கண்ட தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் (Departmental Stores / Super Markets நீங்கலாக) தவிர மற்ற கடைகள் / சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள்/ அடுமனைகள் (Bakery) ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பன்னடுக்கு வணிக வளாகங்கள் (Malls), திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில் (Whole Sale Market) மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

மேலும், உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.

பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

மேற்படி சந்தைகளில் வெளி மாவட்ட / மாநிலத்தை
சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளமல் இருப்பதை சார் ஆட்சியர் / நகராட்சி ஆணையர் பொள்ளாச்சி இதனை உறுதிபடுத்த வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 82% பொது மக்களுக்கு கொரேனா தடுப்பூசி மேல் செலுத்தப்பட்டுள்ளது. 

20.09.2021 முதல் அனைத்து வணிக வளாகங்கள் (Malls), துணிக்கடைகள் (Textile Shops), நகை கடைகள் (Jewellery Shops) மற்றும் இதர கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும். 

மேலும், வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும். 

மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback