Breaking News

செங்கல்பட்டு நீட் தேர்வு தோல்வி பயத்தால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி..!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே 3 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்த நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


 

ஊரப்பாக்கம் அருகே உள்ள அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். ஷீபா இவர்களது மகள் அனுசுயா கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் விடைகளைச் சரிபார்க்கும்போது நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்பதால் சோகமாக இருந்துள்ளார்

இந்நிலையில் இன்று அனுசுயா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சுமார் 40 சதவீதம் அளவுக்கு தீக்காயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback