தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? - இன்று முதல்வர் ஆலோசனை..!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில்,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 11.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்