Breaking News

வானியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்!

அட்மின் மீடியா
0

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம் (40). இவர் மனித நேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில பொறுப்பாளராக இருந்தவர். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 


இந்நிலையில் நேற்று மாலை  6.30 மணியளவில் வசீம் அக்ரம்  வீட்டுக்கு  அருகிலுள்ள மசூதியில் தொழுகை முடிந்து தன் 7 வயது மகனுடன் வீட்டிற்கு நடந்துவந்து கொண்டிருந்தபோது  காரில் வந்த 6 பேர் கும்பல் வசீம் அக்ரமை சரமாரி வெட்டி படுகொலை செய்துள்ளார்கள். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அவர் மகனைவிட்டு விட்டு தப்பி அதே காரில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள்

இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது 

தலைமறைவாக இருந்த குற்றவாளிகளில்  பிரவீன் குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகிய 6 பேர் இன்று மதியம் தஞ்சாவூர்  நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள் 

மேலும் இன்று மாலை முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிவகாசி நீதிமன்றத்தில் டீல் இம்தியாஸ் சரணடைந்ததை அடுத்து 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback