Breaking News

வாணியம்பாடி வசிம் அக்ரம் படு கொலை - கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்! காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

அட்மின் மீடியா
0

வாணியம்பாடி வசிம் அக்ரம் படு கொலை - கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்! காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

 


வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த ஜூலை 26ம் தேதி கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 10 பட்டா கத்திகள், 8 கிலோ கஞ்சா, 10 செல்போன்களை பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த 'டீல் இம்தியாஸை' காவல் துறையினர் தேடி வந்தனர்.

இதற்கிடையே, வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாநிலத் துணைச் செயலாளரும், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் (43) என்பவர், போலீஸாருக்குத் துப்பு கொடுத்ததால்தான் டீல் இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 4 பேரைக் கைது செய்ததாக டீல் இம்தியாஸ் கருதி கூலிப்படையை ஏவி அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே கஞ்சா வியாபாரியை முன்கூட்டியே கைது செய்யாததால் தான் இந்த கொலை நடைபெற்றதாக உறவினர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். இதையடுத்து முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்காத வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback