சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தாக்கல்: அதிமுக வெளிநடப்பு
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர்.
நீட் நுழைவுத் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாகினர்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தினால் கல்வித் தரம் குறையாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளது.
திமுக தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. திமுக ஆட்சி
பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை
தொடங்கியுள்ளோம்.
மேலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ள மசோதாவை அனைத்துக் கட்சியும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்