Breaking News

வங்கக்கடலில் உருவாகிறது குலாப் புயல் இந்திய வானிலை மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. குலாப் என்றால் இந்தியில் ரோஜா என அர்த்தமாகும்.

வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா – ஆந்திரா இடையே கரையை கடக்கிறது

மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.இது வலுவடைந்து, வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே 26ம் தேதி காலை கரையை கடக்கும் என்றும் இந்த புயலால் அதிகமான சேதம் இருக்காது என்றும் கடலோர மாவட்டங்களில், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலூர் , காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback