Breaking News

9 மாவட்டங்களில் 2 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!

அட்மின் மீடியா
0

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .



தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது . 

இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும் , இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது .

அதன்படி காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , வேலூர் , ராணிபேட்டை , திருப்பத்தூர் , திருநெல்வேலி , தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இதர மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தெரிவித்துள்ளது .

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback