BREAKING : சென்னை அருகே வங்ககடலில் 5.1 அளவில் நிலநடுக்கம்
இந்திய நிலநடுக்க ஆய்வியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " சென்னை, ஆந்திரா அருகேயுள்ள வங்கக்கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், பகல் 12.35 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையின் கிழக்கே வங்கக்கடல் பகுதியில் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீ தொலைவில், கடல் பரப்பில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல் தெரியவருகிறது.
இந்த நிலநடுக்கத்தால் சென்னையில் திருவான்மியூர், நுங்கம்பாக்கம், அடையாறு, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆகப் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்