ஒலிம்பிக் பி.வி சிந்து வெண்கல பதக்கம் வென்றார்
ஒலிம்பிக் பேட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் வெண்கலப் பதக்கத்தையாவது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது
இன்று சீனாவின் ஹி பிங்ஜியாவுடான நடந்த போட்டியில் 21-13 என்ற கணக்கில் முதல் கேமை கைப்பற்றினார்.
அடுத்தசெட்டையும் 21- 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவிற்க்கு வெண்கலபதக்கத்தை வென்றார்
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது இரண்டாவது பதக்கம்.பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி வென்ற நிலையில், பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார் பி.வி.சிந்து.
2016 இல் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்