கடற்கரைக்கு செல்லத் தடை ..நாகை ஆட்சியர் உத்தரவு
அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள்அமலுக்கு வர உள்ளன.
நாகை மாவட்டத்தில் இன்று முதல் வரும் வரும் 9 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகை , வேதாரண்யம் , கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திதி கொடுக்க பொதுமக்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .
Tags: தமிழக செய்திகள்