கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபர்களுக்கு கொரானா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்...!!
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வரும் 5 ம் தேதி முதல் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்த அவர், கேரளாவில் தடுப்பூசி போட்டு 14 நாள் கழித்து வருவோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றினை காட்டி தமிழ்நாட்டிற்கு வரலாம் என்றார்.
Tags: தமிழக செய்திகள்