தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்! மாவட்டங்கள் இதுதான்- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்! மாவட்டங்கள் இதுதான் ' - சென்னை வானிலை ஆய்வு மையம்
21.08.2021 இன்று
தமிழக கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகஇன்று தமிழகத்தில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
22.08.2021 அன்று
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
23.08.2021 அன்று
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யலாம்.
24.08.2021 அன்று
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
25.08.2021 அன்று
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அவ்வபோது, கனமழையும் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.மழையளவு கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சேலம் ஏற்காடு, திருவண்ணாமலை போளூரில் தலா 10 செ.மீ., திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் 9 செ.மீ., திருவண்ணாமலை செங்கத்தில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை வரும் 21 மதல் 25 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை:-
Tags: தமிழக செய்திகள்