Breaking News

தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம் நாளை உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

தனியார் பள்ளிகள் கட்டண விவகாரத்தில் நாளை உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம்


 

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணம் முறையே 40 மற்றும் 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் அவர்கள் தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பாக உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback