பத்மப்ரியா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!
அட்மின் மீடியா
0
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்ததை அடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார்கள்.
அதில் சுற்றுசூழல் ஆர்வலராக இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகினார்
அவர் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Tags: தமிழக செய்திகள்