Breaking News

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக 


07.07.2021இன்று 


திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 


நாளை 08.07.2021 

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும்.


நாளை மறுநாள்  09.08.2021


ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


10.07.2021 மற்றும் 11.07.2021 


தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதன் காரணமாக வருகின்ற 10 மற்றும் 11-ம் தேதிகளில் நீலகிரி , கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், திருவள்ளூர் , காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும்.  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை


http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback