கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற திரண்ட கிராம மக்கள்.. சுற்றுசுவர் இடிந்து தவறி விழ்ந்த 40 பேர் 4 பேர் பலி
குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் குழந்தையை காப்பாற்ற போராடினர்.
குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுற்றுச்சுவரில் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டதாகவும், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags: இந்திய செய்திகள்